நிகழ்காலத்தில் பயணியுங்கள்
நம்முடைய மதிப்பை முதலில் நாம் உணரவேண்டும். மற்றவர்கள் நம்மை குறைவாக மதிப்பிடுவதை பற்றி நாம் வருந்த வேண்டியதில்லை. கடந்த காலங்களில் நாம் செய்ய வேண்டியதை செய்யாமலும், செய்யக்கூடாததை செய்தும் பலருடைய ஏளனம், கடிந்துரை மற்றும் ஒதுக்கப்படுதல் போன்றவற்றை பெற்றிருப்போம். எனவே கடந்த கால அனுபவங்களை தவிர மற்றவற்றை முழுவதுமாக மறந்துவிடுவோம்..
நாம் கடந்த காலத்தை குறித்து வருத்தத்திலோ அல்லது எதிர்காலத்தை குறித்த பயத்திலோ வாழுவதினால் நமக்கு எந்தவித பயனும் ஏற்படபோவதில்லை. அந்த காலக்கட்டத்தில் நம்முடைய புரிதல், விழிப்புணர்வு மற்றும் அறிவுக்கு தகுந்தாற்போலவே நாம் செயல்புரிந்தோம். இதிலிருந்து ஒன்றை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் நடந்துக்கொள்வது நம்முடைய செயல்களின் பிரதிபலிப்பாகும். எனவே அவற்றை பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
இப்பொழுது நம்முடைய புரிதலும், விழிப்புணர்வும் மேம்பட்டு இருப்பதால் நம் வாழ்க்கை மாறுபட்டதாக இருக்கும். இந்த நிலையிலிருந்து நம்முடைய வாழ்க்கையை தொடங்குவோம். நம்மிடம் இருப்பவற்றை சிறப்பாக பயன்படுத்துவதில்தான் நம்முடைய திறமை அடங்கியிருக்கிறது. நிகழ்காலத்தை தவிர வேறு எதுவும் எப்போதும் நம்முடன் இருக்க போவதில்லை. எனவே, நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமெனில் நிகழ்காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுவோம்..
நம்முடைய முன்னேற்றத்திற்காக "இப்போது என்ன செய்ய வேண்டும்" என்பதை சிந்தித்து உடனே அதற்கான செயலையும் தொடங்குவோம். செயல்கள் இல்லாத சிந்தனை பயனற்றதாகவே அமையும். அதேசமயம், சிந்தனை இல்லாத செயல்கள் நாம் எதிர்பார்க்கும் வெற்றியை தராது.
நம் முன்னேற்றதிற்காக நாம் பெரிய அளவில் சிந்தித்தாலும் தொடக்கம் என்பது சிறிய அளவில் தான் இருக்கும் என்பதை புரிந்துக்கொள்வோம். சிறு சிறு நிகழ்வுகளைக் கூட உணர்வுபூர்வமாக ரசித்து உற்சாகத்துடன் செய்வோம். அவ்வாறு உற்சாகத்துடன் நாம் செயல்படும் போதுதான் நம்மால் நம்முடைய அதிகபட்ச திறனுடன் செயல்பட முடியும். மேலும், உற்சாகமான நிகழ்வுகளையும், உற்சாகமான சூழ்நிலைகளையும் நம்மை நோக்கி நாம் கவர்ந்திழுப்போம்.. நம்முடைய பயணம் வெற்றியை நோக்கி மட்டுமே. உற்சாகத்துடன் நிகழ்காலத்தில் பயணியுங்கள்...
உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும்
👑ஶ்ரீனி👑
நாம் கடந்த காலத்தை குறித்து வருத்தத்திலோ அல்லது எதிர்காலத்தை குறித்த பயத்திலோ வாழுவதினால் நமக்கு எந்தவித பயனும் ஏற்படபோவதில்லை. அந்த காலக்கட்டத்தில் நம்முடைய புரிதல், விழிப்புணர்வு மற்றும் அறிவுக்கு தகுந்தாற்போலவே நாம் செயல்புரிந்தோம். இதிலிருந்து ஒன்றை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் நடந்துக்கொள்வது நம்முடைய செயல்களின் பிரதிபலிப்பாகும். எனவே அவற்றை பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
இப்பொழுது நம்முடைய புரிதலும், விழிப்புணர்வும் மேம்பட்டு இருப்பதால் நம் வாழ்க்கை மாறுபட்டதாக இருக்கும். இந்த நிலையிலிருந்து நம்முடைய வாழ்க்கையை தொடங்குவோம். நம்மிடம் இருப்பவற்றை சிறப்பாக பயன்படுத்துவதில்தான் நம்முடைய திறமை அடங்கியிருக்கிறது. நிகழ்காலத்தை தவிர வேறு எதுவும் எப்போதும் நம்முடன் இருக்க போவதில்லை. எனவே, நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமெனில் நிகழ்காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுவோம்..
நம்முடைய முன்னேற்றத்திற்காக "இப்போது என்ன செய்ய வேண்டும்" என்பதை சிந்தித்து உடனே அதற்கான செயலையும் தொடங்குவோம். செயல்கள் இல்லாத சிந்தனை பயனற்றதாகவே அமையும். அதேசமயம், சிந்தனை இல்லாத செயல்கள் நாம் எதிர்பார்க்கும் வெற்றியை தராது.
நம் முன்னேற்றதிற்காக நாம் பெரிய அளவில் சிந்தித்தாலும் தொடக்கம் என்பது சிறிய அளவில் தான் இருக்கும் என்பதை புரிந்துக்கொள்வோம். சிறு சிறு நிகழ்வுகளைக் கூட உணர்வுபூர்வமாக ரசித்து உற்சாகத்துடன் செய்வோம். அவ்வாறு உற்சாகத்துடன் நாம் செயல்படும் போதுதான் நம்மால் நம்முடைய அதிகபட்ச திறனுடன் செயல்பட முடியும். மேலும், உற்சாகமான நிகழ்வுகளையும், உற்சாகமான சூழ்நிலைகளையும் நம்மை நோக்கி நாம் கவர்ந்திழுப்போம்.. நம்முடைய பயணம் வெற்றியை நோக்கி மட்டுமே. உற்சாகத்துடன் நிகழ்காலத்தில் பயணியுங்கள்...
உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும்
👑ஶ்ரீனி👑
Thank You
ReplyDeleteவாழ்க வளமுடன் தம்பி...
DeleteGood thought. Thanks
ReplyDeleteநன்றி நன்றி நன்றி.. வாழ்க வளமுடன்...
DeleteGood... Thanks
ReplyDeleteThank you brother...
DeleteGood good veryvery enthusiastic ..நன்றி சகோ
ReplyDeleteநன்றிகள் பல.. வாழ்க வளமுடன்...
Deleteஅருமை.. நன்றி சகோ..
ReplyDeleteநன்றி நன்றி நன்றி.. வாழ்க வளமுடன்...
DeleteNice.. Thank you very much.. Bro..
ReplyDeleteநன்றி நன்றி நன்றி...
DeleteNice.. Thank you very much.. Bro..
ReplyDeleteஅருமை சகோ...மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்.
ReplyDeleteநன்றி.. வாழ்க வளமுடன்...
Deleteவாழ்த்துக்கள் ஶ்ரீனி
ReplyDeleteநன்றி அண்ணா.. வாழ்க வளமுடன்...
DeleteSuper bro
ReplyDeleteநன்றி நன்றி நன்றி...
Deleteவாழ்க வளமுடன்
ReplyDeleteநன்றி நன்றி நன்றி
Deleteவாழ்க வளமுடன்
ReplyDelete