Posts

நிகழ்காலத்தில் பயணியுங்கள்

          நம்முடைய மதிப்பை முதலில் நாம் உணரவேண்டும். மற்றவர்கள் நம்மை குறைவாக மதிப்பிடுவதை பற்றி நாம் வருந்த வேண்டியதில்லை. கடந்த காலங்களில் நாம் செய்ய வேண்டியதை செய்யாமலும், செய்யக்கூடாததை செய்தும் பலருடைய ஏளனம், கடிந்துரை மற்றும் ஒதுக்கப்படுதல் போன்றவற்றை பெற்றிருப்போம். எனவே கடந்த கால அனுபவங்களை தவிர மற்றவற்றை முழுவதுமாக மறந்துவிடுவோம்..            நாம் கடந்த காலத்தை குறித்து வருத்தத்திலோ அல்லது எதிர்காலத்தை குறித்த பயத்திலோ வாழுவதினால் நமக்கு எந்தவித பயனும் ஏற்படபோவதில்லை. அந்த காலக்கட்டத்தில் நம்முடைய புரிதல், விழிப்புணர்வு மற்றும் அறிவுக்கு தகுந்தாற்போலவே நாம் செயல்புரிந்தோம். இதிலிருந்து ஒன்றை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் நடந்துக்கொள்வது நம்முடைய செயல்களின் பிரதிபலிப்பாகும். எனவே அவற்றை பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.             இப்பொழுது நம்முடைய புரிதலும், விழிப்புணர்வும் மேம்பட்டு இருப்பதால் நம் வாழ்க்கை மாறுபட்டதாக இருக்கும். இந்த நிலையிலிருந்து நம்முடைய வாழ்க்கையை தொடங்குவோம். நம்மிடம் இருப்பவற்றை சிறப்பாக பயன்படுத்துவதில்தான் நம்முடைய திற

வரவேற்பதில் மகிழ்கிறேன்

இந்த வலைப்பூவில் (Weblog) புதிதாய் இணைந்துள்ள உங்களை இந்த வலைப்பூவின் சார்பாக வரவேற்பதில் மகிழ்கிறேன்.. இந்த வலைப்பூவில் உற்சாகமான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய மனம், ஆரோக்கியம், செல்வ செழிப்பு, உறவுமுறை மேலாண்மை போன்றவைகள் பற்றி அறிந்துக்கொள்ள வழிகாட்டப்படும்.. இவைகள் தொடர்பான பதிவுகள் இதில் பதியப்படும்..  உங்களின் நிறைவான ஆதரவிற்கும், கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும் 👑ஶ்ரீனி👑